tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

நாகப்பட்டினம், ஜுன் 28- நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் கரியாபட்டினத்தில் செயல் படுத்தவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டக் களமான கரியாபட்டினத்தில் தான் வெள்ளிக் கிழமை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிராமசபைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தை நடத்திட கிராம ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் வந்தனர். கூட்டத்தில் கரியாபட்டினம் மக்களில் 400 பெண்கள் உட்பட 700-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராம சபையின் முதல் தீர்மானமாக இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி அது தொடர்பான மனுவையும் மக்கள் அளிக்க முன் வந்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் மனுவை பெற்றுக் கொள்ள மறுத்தனர்.

இதன்பின் கூட்டத்தைப் பொது மக்கள் புறக்கணித்து போராட்டம் நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் இப்பகுதியில் செயற்படுத்தக் கூடாது. இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டுத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.   பொதுமக்களின் போராட்டம் தீவிரமாகிய நிலையில், காவல் துறையினரும் வேதாரணியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ் தூரியும் கிராமசபை கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வந்தனர். கஸ்தூரி, போராடிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தங்கள் மனுவை  பொது மக்கள், கஸ்தூரியிடம் அளித்து, கிராமசபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், நீங்கள் அளித்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்து உங்கள் கோரிக்கை களை எடுத்துச் சொல்கிறேன் எனக் கூறிய பின்பு கரியாபட்டினம் பொது மக்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா  மாவட்ட கிராமசபைக் கூட்டங் களில் கலந்து கொண்ட மக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை

நெடுவாசல் உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மே முதல் நாளில் நடக்க  வேண்டிய கிராம சபைக் கூட்டம் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த தால் ஒத்தி வைக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் நடந்தது. இந்த கிராமசபைக் கூட்ட ங்கள் பொதுமக்கள் பங்கேற்பு டன் அதிகாரிகள் முன்னிலையில் நடை பெற்றது. இந்தக் கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக் களாகக் கொடுத்தனர். மனுக்கள் குறித்த விவாதங்களுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நெடுவாசல், சேந்தன் குடி, கொத்தமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் திருவரங்குளம், அறந் தாங்கி ஒன்றியத்தில் உள்ள சுமார் 30 கிராமங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்று 2017 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம்.  கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், காவிரி பாசனப் பகுதி யில் ஹைட்ரோ கார்பன் திட்டங் களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருவது வேதனை அளிக்கிறது. அதனால் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றனர்.